sivasiva.org
Search this site with
song/pathigam/paasuram numbers
Or Tamil/English words

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian   Marati  
சேக்கிழார்  
சத்தி நாயனார் புராணம்  

12 -ஆம் திருமுறை   12.460  
பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்
 
உழவர்கள், களை என எடுத்த தாமரை மலர்களிலிருந்து பெருகிய தேனானது குளத்தை நிறைக்க உள்ளதும், ஒப்பற்ற செங்கோல் சிறப்பால் எண் திசையிலும் தம் வெற்றித் தூண்களை நாட்டி அரசு செய்யும் சோழ மன்னரின் காவிரியாறு பாயும் நாட்டில் உள்ளதும் வரிஞ்சையூர் என்பதாகும். *** வரிஞ்சையூர் - தஞ்சை மாவட்டத்தில் கீழ்வேளூர் என்னும் ஊருக்குத் தெற்கில் ஏறத்தாழ 7 கிமீ. தொலைவில் உள்ளது. இவ்வூர்த் திருக்கோயிலில் இந்நாயனாரின், திருவுருவம் எழுந்தருளு விக்கப் பெற்று வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.
இவ்வரிஞ்சையூரில் வாய்மைப் பண்பையுடைய வேளாளர் குலமானது பெருஞ்சிறப்படையது; அக்குலத்துள் வந்து தோன்றியவரும், நான்முகன் முதலான தேவர்களும் நினைத்தற்கரிய சிலம்பை அணிந்த சிவபெருமானின் திருவடிக்கு ஆட்செய்பவரு மான ஒருவர் வாழ்ந்து வந்தார்.
குறிப்புரை:

அவர் தலைவரான சிவபெருமானின் அடியவரை இவ்வுலகத்தில் இகழ்ந்து பேசுபவரின் நாவை வலிந்து அரியும் ஆற்றலால் 'சத்தியார்' எனும் பெயரை உடையவர்.
குறிப்புரை:

சிவனடியாரைத் தீங்கு கூறி இகழ்ந்த நன்மை இல்லாரின் நாவைத் துண்டித்தற்கு ஏற்ப, வளைந்த 'தண்டாயம்' என்ற கருவிகொண்டு இழுத்து, அவ்விடத்தேயே கூர்மையான கத்தியால் அரிந்து, அன்பு பெருகும் சிறப்புடைய தொண்டில் உயர்ந்து விளங்கினார். *** தண்டாயம் - பற்றி இழுக்கும் குறடு போன்றதொரு கருவி. வலித்து - இழுத்து. ஆயில் - கூர்மை.
அத்தகைய ஆண்மையுடைய திருத்தொண்டில் நிலைபெற்ற வலிமையுடன் பல ஆண்டுகள் அன்புடன் செய்து வந்தவர், திருச்சடையில் கங்கை யாற்றைச் சூடிய இறைவரின் செம்மை நெறித்தொண்டினைத் தொடர்ந்தும் செய்து வந்தவராவார்.
குறிப்புரை:

ஐயம் இல்லாமல் அரியதான இத்திருப்பணியை மெய்ம்மையாகச் செய்து வந்த வீரத்தன்மையுடைய தொண்டரான சத்தியார், உலகு உய்ய அழகிய அம்பலத்தில் ஆடுபவரின் செம்மை தரும் திருவடிநிழலைச் சேர்ந்தார். *** ஐயம் - இச்செயல் செயத்தகுமோ எனும் ஐயம். இறை வனை இகழ்தலினும், அடியாரை இகழ்தல் பெருங்குற்றமாதலின் அச்செயல் செய்வாரின் நாவை அரிதல் கொடிதன்று என்ற துணிவும் உறைப்பும் உடையவர்.
சிவபெருமானின் தொண்டர்களைப் போற்றாதார் வீழ, அவர்களின் நாவை அரியும் சத்தி நாயனாரின் திருவடிகளை வணங்கிச் சிவநெறியான மாதவத்தை யுடைய ஐயடிகள் என்னும் தூய 'காடவரின்' அடிமைத் திறத்தைச் சொல்வாம். *** சாய - வீழ இனி அச்செயலைச் செய்யாது ஒழிய. சத்தி நாயனார் புராணம் முற்றிற்று.

This page was last modified on Sun, 24 Dec 2023 19:05:54 +0000
 
   
    send corrections and suggestions to admin @ sivasiva.org   https://www.sivaya.org/naayanmaar_history.php?&pathigam_no=12.460&naayanmaar=%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF&lang=gujarathi&period=600-840&puja_month=Ayppasi&puja_star=Poosam;